Pezhai Logo
Powered by Blogger.

Wednesday, October 23, 2013


தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே
தானநன்னே தந்தநானே

வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

சிங்க தெருவெல்லாம்
சிந்தி அழுகிறேனே
சிங்கார சிங்கபூர
கண்ணீரில் கழுவுறேனே

வட்டிகடன் வாங்கி
வாக்கப்பட்டு போறவள
வாசலோடு நிக்கவச்சி
வந்துநானும் சேர்ந்தேய்யா

வட்டிகடன் கட்டி
வண்டியில சாமான்வாங்கி
வந்தவக வாயடக்க
வரிசை கொடுத்தேன்ய்யா

பக்கவாதம் வந்து
பாலகனா போனவரே
தொண்டைகுழி விக்கி
தொலைதூரம் போனதேனோ?

போனமகன் வரலயான்னு
பொறுக்கலையா உன்னுசுரு
புள்ளகொல்லி விழாம
போனதய்யா உன்னுசுரு.

2 comments: